Saturday, February 22, 2020

60) வினாவெழுத்து


வினாவெழுத்து

Interrogative Letter

எ யா
என்னும்
இரண்டு எழுத்துகள்
சொல்லுக்கு முதலில்
அகத்தும் புறத்தும்

ஆ ஓ
என்னும்
இரண்டு எழுத்துகள்
சொல்லுக்கு ஈற்றிலும்

என்னும் எழுத்து
சொல்லுக்கு
முதலிலும் ஈற்றிலும்

தனித்து நின்று
வினாப் பொருள்
உணர்த்தி வந்தால்

வினாவெழுத்து

என்று
பெயரிட்டு
அழைக்கப்பெறும்



ஒரு சொல்லின்
அகத்தே நின்று
வினாப்பொருளை
உணர்த்துவது

அகவினா


(உ-ம்)


சொல்லுக்கு முதலில் வரும்
அகவினா

எ யா எழுத்துகள்

எவன்/எவள்/எவர்கள்/எது/எவை
யாவன்/யாவள்/யாவர்/யாது/யாவை

ஏ எழுத்து

ஏவன்/ஏவள்/ஏவர்/ஏது/ஏவை



ஒரு சொல்லின்
புறத்தே நின்று
வினாப்பொருளை
உணர்த்துவது

புறவினா


(உ-ம்)


சொல்லுக்கு முதலில் வரும்
புறவினா

எ யா எழுத்துகள்

எம்மனிதன் (எ + மனிதன்)
யாங்ஙனம் (யா + ஙனம்)


சொல்லுக்கு ஈற்றில் வரும்
புறவினா

ஆ ஓ எழுத்துகள்

கொற்றனா (கொற்றன் + ஆ)
கொற்றனோ (கொற்றன் + ஓ)

ஏ எழுத்து

கொற்றனே (கொற்றன் + ஏ)



மேலும்


வினாவெழுத்து
குறித்து
நினைவில்
கொள்ள வேண்டியவை


சொல்லுக்கு
முதலில்
அகவினா
புறவினா
ஆகிய
இரண்டும் வரும்


சொல்லுக்கு
ஈற்றில்
அகவினா வராது

அதாவது

சொல்லுக்கு
ஈற்றில் வரும்
வினாவெல்லாம்
புறவினாவாம்


ஏகாரம்
முதலில்
வரும்போது
அகவினாவாக
மட்டுமே வரும்
புறவினாவாக
வராது



நன்னூல்
சூத்திரம்-67


எயா முதலும் ஆஓ வீற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே

எயா முதலும் ஆஓ ஈற்றும்
ஏஇரு வழியும் வினாஆ கும்மே

எ யா எனும் எழுத்துகள்
சொல்லின் முதலிலும்
ஆ ஓ எனும் எழுத்துகள்
சொல்லின் ஈற்றிலும்
ஏ எனும் எழுத்து
சொல்லின் முதலிலும் ஈற்றிலும்
வினாப் பொருளில் வந்தால்
வினாவெழுத்து / வினா எழுத்து


🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment