எழுத்தின் முறை
The Way How The Alphabet Is Arranged
சிறப்பினாலும்
இனத்தினாலும்
ஒன்றன்பின்
ஒன்றாக
பொருந்தி
இவ்வுலகில்
அகரம்
முதலாக
தொன்றுதொட்டு
வழங்குதலே
எழுத்தின்
முறையாம்
விளங்கக்கூறின்
உயிர் போலத்
தானே
இயங்கவல்லது
உயிரெழுத்தின்
சிறப்பு
உயிரின்
உதவியின்றி
இயங்கமுடியாதது
மெய்யெழுத்தின்
சிறப்பின்மை
சிறப்பும்
சிறப்பின்மையும்
கருதி
உயிர் எழுத்து
முன்னும்
மெய் எழுத்து
பின்னும்
வைக்கப்பட்டன
அவ்வாறே
குறிலெழுத்தின்
விகாரமே
நெடிலெழுத்து
என்பதால்
குற்றெழுத்து
முன்னும்
அவ்வவற்றிற்கு
இனமொத்த
நெட்டெழுத்து
அவ்வவற்றிற்கு
பின்னும்
வைக்கப்பட்டன
இதனைப்
போன்றே
வலியாரை
முன்வைத்து
மெலியாரை
பின்வைத்தல்
மரபு
என்பதால்
வல்லெழுத்து
முன்னும்
அவ்வவற்றிற்கு
இனமொத்த
மெல்லெழுத்து
அவ்வவற்றிற்கு
பின்னும்
வைக்கப்பட்டன
வல்லெழுத்து
மெல்லெழுத்து
உணர்ந்தாலன்றி
இடையெழுத்து
உணரலாகாது
என்பதால்
அச்சிறப்பின்மை
கருதி
ஓரினமான
இடையெழுத்து
ஆறும்
அவற்றின்
பின்
வைக்கப்பட்டன
மேலும்
ற் ன் என்பன
கலப்பொலிகளாக
அமைந்துள்ள
சிறப்பின்மையால்
இடையெழுத்து
இவ்விரு (ற், ன்)
எழுத்துகளுக்கு
முன்னர்
இடமளிக்கப்பட்டு
ற் ன் எழுத்துகள்
இறுதியில்
வைக்கப்பட்டன
என்பது
எழுத்தின்
முறையாம்
நன்னூல்
சூத்திரம்-73
சிறப்பினு
மினத்தினுஞ் செறிந்தீண் டம்முதல்
நடத்த
றானே முறையா கும்மே
சிறப்பினும்
இனத்தினும் செறிந்துஈண் டுஅம்முதல்
நடத்த ல்தானே
முறைஆ கும்மே
சிறப்பினாலும்
இனத்தாலும் பொருந்தி
இங்கு
அகரம் முதலாக வழங்குதல்தான்
எழுத்தினது
முறை ஆகும்.
No comments:
Post a Comment