Saturday, February 22, 2020

62) எழுத்தின் முறை

எழுத்தின் முறை

The Way How The Alphabet Is Arranged

சிறப்பினாலும்
இனத்தினாலும்

ஒன்றன்பின்
ஒன்றாக
பொருந்தி

இவ்வுலகில்

அகரம்
முதலாக
தொன்றுதொட்டு
வழங்குதலே

எழுத்தின்
முறையாம்


விளங்கக்கூறின்


உயிர் போலத்
தானே
இயங்கவல்லது
உயிரெழுத்தின்
சிறப்பு

உயிரின்
உதவியின்றி
இயங்கமுடியாதது
மெய்யெழுத்தின்
சிறப்பின்மை

சிறப்பும்
சிறப்பின்மையும்
கருதி

உயிர் எழுத்து
முன்னும்
மெய் எழுத்து
பின்னும்
வைக்கப்பட்டன


அவ்வாறே


குறிலெழுத்தின்
விகாரமே
நெடிலெழுத்து
என்பதால்

குற்றெழுத்து
முன்னும்
அவ்வவற்றிற்கு
இனமொத்த
நெட்டெழுத்து
அவ்வவற்றிற்கு
பின்னும்
வைக்கப்பட்டன


இதனைப்
போன்றே


வலியாரை
முன்வைத்து
மெலியாரை
பின்வைத்தல்
மரபு
என்பதால்

வல்லெழுத்து
முன்னும்
அவ்வவற்றிற்கு
இனமொத்த
மெல்லெழுத்து
அவ்வவற்றிற்கு
பின்னும்
வைக்கப்பட்டன


வல்லெழுத்து
மெல்லெழுத்து
உணர்ந்தாலன்றி
இடையெழுத்து
உணரலாகாது
என்பதால்

அச்சிறப்பின்மை
கருதி
ஓரினமான
இடையெழுத்து
ஆறும்

அவற்றின்
பின்
வைக்கப்பட்டன


மேலும்


ற் ன் என்பன
கலப்பொலிகளாக
அமைந்துள்ள
சிறப்பின்மையால்

இடையெழுத்து
இவ்விரு (ற், ன்)
எழுத்துகளுக்கு
முன்னர்
இடமளிக்கப்பட்டு
ற் ன் எழுத்துகள்
இறுதியில்
வைக்கப்பட்டன


என்பது


எழுத்தின்
முறையாம்



நன்னூல்
சூத்திரம்-73


சிறப்பினு மினத்தினுஞ் செறிந்தீண் டம்முதல்
நடத்த றானே முறையா கும்மே

சிறப்பினும் இனத்தினும் செறிந்துஈண் டுஅம்முதல்
நடத்த ல்தானே முறைஆ கும்மே

சிறப்பினாலும் இனத்தாலும் பொருந்தி
இங்கு அகரம் முதலாக வழங்குதல்தான்
எழுத்தினது முறை ஆகும்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment