Monday, January 27, 2020

37) தலை மாணாக்கர்


மூவகை மாணாக்கர்  தலை மாணாக்கர்

Three Classes of Scholars or Students - Good

ஆசிரியரால்
கற்பிக்கப்படும்
நூற்பொருளை

மாணாக்கர்
கற்கும் தன்மையின்
அடிப்படையில்
அறியப்படுவது

மூவகை
மாணாக்கர்


அவர்கள்
முறையே


அன்னம்
பசு
போன்றவர்
தலை மாணாக்கர்

மண்
கிளி
போன்றவர்
இடை மாணாக்கர்

ஓட்டைக்குடம்
ஆடு
எருமை
சல்லடை
போன்றவர்
கடை மாணாக்கர்


இங்கு

அம்மூவகை
மாணாக்கரில்

அன்னம்
பசு
போன்று
கருதப்படுகின்ற

தலை மாணாக்கர்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


பாலையும் நீரையும்
வேறுபிரித்து
பாலை மட்டும்
பருகுவது

அன்னம்


கிடைத்த இடத்தில்
வயிறு நிரம்ப
புல்லை
மேய்ந்துவிட்டு

பின்பு

ஓரிடத்து இருந்து
அதனை
வாயில் வருவித்து
மென்று தின்பது

பசு


அவற்றைப்
போன்று
(அன்னம், பசு
போன்று)


ஆசிரியர்
கற்பிப்பதில்

நல்லதையும் அல்லதையும்
வேறுபிரித்து
நல்லதை மட்டும்
கொள்ளும்
மாணாக்கர்

குணத்தையும் குற்றத்தையும்
வேறுபிரித்து
குணத்தை மட்டும்
கொள்ளும்
மாணாக்கர்

ஆசிரியர்
கற்பிக்கும்

எல்லாவற்றையும்
செவியில்
வாங்கிக் கொண்டு

பின்பு

அவற்றைச்
சிந்தனைக்குக்
கொண்டுவந்து
அலசி
ஆராய்ந்திடும்
மாணாக்கர்


தலை மாணாக்கர்



நன்னூல்
சூத்திரம்-38


அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்

அன்னம் ஆவே மண்ஒடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலைஇடை கடைமா ணாக்கர்

அன்னம் பசுப் போன்றவர் தலை மாணாக்கர்;
மண் கிளி போன்றவர் இடை மாணாக்கர்;
ஓட்டைக்குடம் ஆடு எருமை சல்லடை
போன்றவர் கடை மாணாக்கர் ஆவர்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment