Monday, January 27, 2020

41) கற்கும் இயல்பு


கற்கும் இயல்பு

The Way To Learn

காலத்தையும்
இடத்தையும்
தூயதாகத்
தேர்ந்தெடுத்தும்

மேன்மையான
இடத்திலிருந்தும்

தான் வழிபடும்
கடவுளைத்
துதித்து வணங்கியும்

தன்னால்
சொல்லப்படுவதாகிய
நூற்பொருளைத்
தனது மனத்துள்ளே
நிறைத்தும்

துரிதப்
படாதவனாகவும்

கோபப்
படாதவனாகவும்

கற்பிப்பதில்
விருப்பம் கொண்டும்

இன்முகத்துடனும்

மாணவன்
கொளத்தகும் அறிவு
இவ்வளவு
என அறிந்து
அவன் அறிவு
ஏற்கும்படியாகவும்

மாறுபாடில்லாத
மனத்துடனும்

நூல் பொருளைக்
கற்பித்தல்

என்பது

அறிவுடையோர்
குறிப்பிடும்

ஆசிரியரின்

கற்பிக்கும்
இயல்புகள்


அதனைப்
போன்றே


இங்கு நாம்

மாணாக்கரின்

கற்கும்
இயல்புகளையும்

சற்று
விரிவாக
அறிவோம்


காலத்தோடு
சென்றும்

வழிபாடு
செய்வதில்
வெறுப்பு
இல்லாதவனாகவும்

நற்குணத்தோடு
பழகியும்

ஆசிரியர்
குறிப்பினை
உணர்ந்து

அவர்
(ஆசிரியர்)

இரு
என்றால்
இருந்தும்

சொல்
என்றால்
சொல்லியும்

பசித்து
உண்பவனுக்கு
உணவின்மேல்
உள்ள
ஆசைபோல்

பாடம்
கேட்டலில்
ஆர்வம்
உடையவனாகவும்

சித்திரப்பாவை
போன்று
அசைவறு
குணங்கொண்டு
அடங்கியும்

காதானது
வாயாகவும்

மனமானது
கொள்ளும்
இடமாகவும்

கேட்டவற்றை
விளங்கும்படி
கேட்டு
அவற்றை
மறந்துவிடாது
உள்ளத்தில்
நிறைத்தும்

போ
என்றால்
போகுதலும்

மாணாக்கரின்

கற்கும்
இயல்புகள்

என்று

சொல்லுவர்
அறிவுடையோர்



நன்னூல்
சூத்திரம்-40


கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவ னன்னவார் வத்த னாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போத லென்மனார் புலவர்

கோடல் மரபே கூறும் காலைப்
பொழுதுஒடு சென்று வழிபடல் முனியான்
குணத்துஒடு பழகி அவன்குறிப் பின்சார்ந்து
இருஎன இருந்து சொல்எனச் சொல்லிப்
பருகுவன் அன்னஆர் வத்த ன்ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவிவாய் ஆக நெஞ்சுகளன் ஆகக்
கேட்டவை கேட்டுஅவை விடாதுஉளத்து அமைத்துப்
போஎனப் போதல் என்மனார் புலவர்

கற்றல் இயல்பினைச் சொல்லவதென்றால்
(அது) காலத்தோடு சென்று: வழிபடுதலில்
வெறுப்பில்லாதவனாய்: குணத்தோடு பழகி:
ஆசிரியர் குறிப்பினைச் சார்ந்து: இரு
என்றால் இருந்து: ,சொல் என்றால் சொல்லி:
பசித்து உண்பவன் போல் (பாடம் கேட்டலில்)
ஆர்வம் உடையவனாக: காதானது வாயாக:
மனமானது கொள்ளுமிடமாக;
கேட்டவற்றைக் கேட்டு: அவற்றை மறந்து
விடாது உள்ளத்தில் நிறைத்து: போ என்றால்
போகுதல் என்று சொல்லுவர் புலவர்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar





No comments:

Post a Comment