Monday, January 27, 2020

46) நூல் செய்யும் விதம்


நூல் செய்யும் விதம்

Four Ways In Which A Book May Be Composed

மனிதன்

தன்னுடைய
எண்ணம்
கருத்து
சிந்தனை
ஆகியவற்றை

எழுத்து உருவில்
காட்டும்
ஒரு கருவி

நூல்


அது

முதல் நூல்
வழி நூல்
புடை நூல்

என
மூவகையாம்


அதாவது


வினையினின்று
விலகி
தேர்ந்த
ஞானத்தை உடைய
ஆய்வாளன்
அறிந்து செய்வது

முதல் நூல்


முதல் நூலை
முழுவதும் ஒத்து
தேவையான
வேறுபாட்டுடன்
மரபு
கெடாது செய்வது

வழி நூல்


முதல் நூலுக்கும்
வழி நூலுக்கும்
சிறுபான்மை
ஒத்து
பெரும்பான்மை
வேறுபாட்டுடன்
செய்வது

புடை நூல்
(சார்பு நூல்)



இங்கு


அம்மூவகை
நூல்கள்
யாக்கும் விதம்
(ஆக்கும் விதம்)
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


ஒன்று

விரிந்து
கிடப்பனவற்றைத்
தொகுத்துச்
சொல்லுதல்

(உதாரணம் நேமிநாதம்)


இரண்டு

சுருங்கிக்
கிடப்பனவற்றை
விரித்துச்
சொல்லுதல்

(உதாரணம் பெரியபுராணம்)


மூன்று

தொகுத்தும்
விரித்தும்
சொல்லுதல்

(உதாரணம் நன்னூல்)


நான்கு

ஒரு
மொழியில்
உள்ளதை
மற்றொரு
மொழியில்
சொல்லுதல்
(மொழிப்பெயர்ப்பு)

(உதாரணம் நைடதம்)


என்று
சொல்லத் தக்க
வகையில்

நூல்
செய்யும்
விதம்

நான்கு
என்று
சொல்வர்
அறிவுடையோர்



நன்னூல்
சூத்திரம்-50


தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிப்பெயர்ப்
பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப

தொகுத்தல் விரித்த ல்தொகைவிரி மொழிப்பெயர்ப்
புஎனத்தகு நூல்யாப் புஈர்இரண் டுஎன்ப

(விரிந்து கிடப்பனவற்றைத்) தொகுத்துச்
சொல்லுதல்; (சுருங்கிக் கிடப்பனவற்றை)
விரித்துச் சொல்லுதல்; தொகுத்தும்
விரித்தும் சொல்லுதல்; ஒரு மொழியில்
உள்ளதை மற்றொரு மொழியில்
சொல்லுதல் (மொழிப்பெயர்ப்பு) என்று
சொல்லத் தக்க வகையில் நூல் செய்யும்
விதம் நான்கு என்று சொல்வர்
(அறிவுடையோர்).



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar






No comments:

Post a Comment