Monday, January 27, 2020

48) தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள்


தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள்

When A Man May Praise Himself

பிறர்க்குத்
தோன்றாத
பொருள்களைத்

தான்
தோன்றச்
செய்து

துறைகள்
பலவற்றைச்
சார்ந்து

மிகச்
சிறந்ததொரு
நூலைச்
செய்திருப்பினும்

தானே
தன்னைப்
புகழ்ந்து கொள்வது
தகுதியில்லை


என்பதால்


நூலுக்கான
சிறப்புப்பாயிரத்தை


நூல் செய்தோனின்
ஆசிரியர்

நூல் செய்தோனோடு
கற்றவர்

நூல் செய்தோனின்
மாணாக்கர்

நூலுக்குத்
தகுந்த உரையைச்
செய்திடும்
தகுதி உடையவர்

எனும்
நால்வருள் ஒருவர்

சொல்லுதலே
முறைமை


இருப்பினும்


அரசனது அவைக்கு
தன்னைப் பற்றி
எழுதிடும்
விண்ணப்பக்கவியிலும்

தன்னுடைய
கல்வித் திறனை
அறியாதவரிடத்திலும்

கற்றறிந்தார் சபையில்
வாதம் செய்து
வெல்லும் போதிலும்

தன்னை எதிரணி
இகழ்ந்து
பேசும் காலத்திலும்

தன்னைத்தான்
புகழ்ந்து கொள்ளுதலும்
தகுந்தது
புலவர்க்கே.



நன்னூல்
சூத்திரம்-53

மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலுந் தகும் புலவோற்கே

மன்னுடை மன்றத் துஓலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்ற ல்உணரா ர்இடையினும்
மன்னிய அவைஇடை வெல்உறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே

அரசனது அவைக்கு (தன்னைப் பற்றி
எழுதிடும்) விண்ணப்பக்கவியிலும்;
தன்னுடைய (கல்வித்) திறனை
அறியாதவரிடத்திலும்; கற்றறிந்தார்
சபையில் (வாதம் செய்து) வெல்லும்
போதிலும்; தன்னை எதிரணி இகழ்ந்து
பேசும் காலத்திலும் தன்னைத்தான் 
புகழ்ந்து கொள்ளுதலும் தகுந்தது புலவர்க்கே.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar





No comments:

Post a Comment