Wednesday, May 20, 2020

64) முதலெழுத்துகளுக்கு இடப்பிறப்பு


முதலெழுத்துகளுக்கு இடப்பிறப்பு

The Production Of Primary Letters

மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
சார்பு எழுத்து

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
மெய் எழுத்து

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


இங்கு


மொழிக்கு
முதன்மையாயும்
பிற எழுத்துகள்
தோன்றுவதற்கு
அடிப்படையாயும்
அமைகின்ற

முதலெழுத்துகளின்
இடப்பிறப்பு
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


ஒலி எழுத்திற்கு
வேண்டும்
காரணங்களில்
குறைவின்றி

நிறைந்த
உயிரினது
முயற்சியால்

உள்ளே நின்ற
காற்றானது
எழுப்ப

எழுகின்ற
செவிப்புலனாகும்
அணுக்கூட்டம்


(இடப் பிறப்பு)


மார்பு
கழுத்து
தலை
மூக்கு

ஆகிய
இடங்களைப்
பொருந்தி


(முயற்சிப் பிறப்பு)


உதடு
நாக்கு
பல்
அண்ணம்

ஆகியவற்றின்
முயற்சியால்


வெவ்வேறு
வகைப்பட்ட

எழுத்துகளுக்கான
ஓசைகள்
தோன்றுதல்

எழுத்துகளின்
பிறப்பாம்


இம்முறைமைப்படி


உயிரெழுத்துகளுக்கும்
மற்றும்
மெய்யெழுத்துகளில்
இடையினத்திற்கும்
இடப்பிறப்பு

கழுத்து


மெய்யெழுத்துகளில்
மெல்லினத்திற்கு
இடப்பிறப்பு

மூக்கு


மெய்யெழுத்துகளில்
வல்லினத்திற்கு
இடப்பிறப்பு

மார்பு


நன்னூல்
சூத்திரம்-74


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே

நிறைஉயிர் முயற்சியி ன்உள்வளி துரப்ப
எழும்அணுத் திரள்உரன் கண்ட ம்உச்சி
மூக்குஉற் றுஇதழ்நாப் பல்அணம் தொழிலின்
வெவ்வே றுஎழுத்துஒலி ஆய்வரல் பிறப்பே

(ஒலி எழுத்திற்கு வேண்டும் காரணங்களில்
குறைவின்றி) நிறைந்த உயிரினது
முயற்சியால் உள்ளே நின்ற உதானன் எனும்
காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாகும்
அணுக்கூட்டம் மார்பு, கழுத்து, தலை, நாசி
ஆகிய இடங்களைப் பொருந்தி உதடு,
நாக்கு, பல், அண்ணம் ஆகியவற்றின்
முயற்சியால் வேவ்வேறு வகைப்பட்ட
எழுத்துகளுக்கான ஓசைகள் தோன்றுதல்
எழுத்துகளின் பிறப்பு ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-75


அவ்வழி
ஆவி யிடைமை யிடமிட றாகும்
மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை

அவ்வழி
ஆவி இடைமை இடம்மிட றுஆகும்
மேவு மென்மைமூக் குஉரம்பெறும் வன்மை

மேற்சொன்ன பிறப்பு முறைமைப்படி
உயிரெழுத்துகளுக்கும் இடையினத்திற்கும்
இடப்பிறப்பு கழுத்து ஆகும், மெல்லினத்திற்கு
இடப்பிறப்பாகப் பொருந்துவது மூக்கு. மார்பை
இடப்பிறப்பாகப் பெறுவது வல்லினம்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment