Friday, December 27, 2019

34) கற்பிக்கும் இயல்பு


கற்பிக்கும் இயல்பு

The Method of Teaching 

குடிப்பிறப்பு
அருளுடைமை
கடவுள் பக்தி
ஆகியவற்றில்
உயர் சிறப்பும்

பல
கலைகளையும்
கற்றுத்
தேர்ந்த அறிவும்

தாம்
கற்றவற்றைப்
பிறருக்கு
எடுத்துரைக்கும்
சொல் வன்மையும்

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமையும்

உலகியல் அறிவும்

உயர்ந்த குணமும்


ஆசிரியரின்
இயல்புகள்


மேலும்


காலத்தையும்
இடத்தையும்
தூயதாகத்
தேர்ந்தெடுத்தும்

மேன்மையான
இடத்திலிருந்தும்

தான் வழிபடும்
கடவுளைத்
துதித்து வணங்கியும்

தன்னால்
சொல்லப்படுவதாகிய
நூற்பொருளைத்
தனது மனத்துள்ளே
நிறைத்தும்

துரிதப்
படாதவனாகவும்

கோபப்
படாதவனாகவும்

கற்பிப்பதில்
விருப்பம் கொண்டும்

இன்முகத்துடனும்

மாணவன்
கொளத்தகும் அறிவு
இவ்வளவு
என அறிந்து
அவன் அறிவு
ஏற்கும்படியாகவும்

மாறுபாடு இல்லாத
மனத்துடனும்

நூல் பொருளைக்
கற்பித்தல்

என்பது

அவரின்
(ஆசிரியரின்)

கற்பிக்கும்
இயல்புகள்

என

அறிவுடையோர்
குறிப்பிடுவன


நன்னூல்
சூத்திரம்-36


ஈத லியல்பே யியம்புங் காலைக்
காலமு மிடனும் வாலிதி னோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப.

ஈதல் இயல்பே இயம்பும் காலைக்
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகம்மலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளம்கொளக்
கோட்டம்இல் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப.

கற்பித்தல் இயல்பினை சொல்வதென்றால்
(அது) காலத்தையும் இடத்தையும் தூயதாய்
தேர்ந்தெடுத்து மேன்மையான
இடத்திலிருந்து தான் வழிபடும் கடவுளைத்
துதித்து (தன்னால்) சொல்லப்படுவதாகிய
(நூற்)பொருளை (தனது) மனத்துள்ளே
நிறைத்தும் துரிதப்படாதவனாகவும் கோபப்
படாதவனாகவும் (கற்பிப்பதில்) விருப்பம்
கொண்டும் இன்முகத்துடனும் மாணவன்
கொளத்தகும் அறிவு இவ்வளவு என
அறிந்து அவன் அறிவு ஏற்கும்படியாகவும்
மாறுபாடில்லாத மனத்துடனும்
நூல் பொருளைக் கற்பித்தல் என்று
கூறுவர் (அறிவுடையோர்).



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




33) ஆசிரியர் ஆகாதவர் இயல்பு-2


ஆசிரியர் ஆகாதவர் இயல்பு 
(கழற்குடம்  மடல்பனை  பருத்திக் குண்டிகை  முடம் தெங்கு)

The Bad Qualities Of The Teacher (2)

போதிக்கும்
குணமில்லாதவர்

இழிந்த குணத்தை
இயல்பாகக் கொண்டவர்

பொறாமை
ஆசை
வஞ்சம்
அச்சம்
ஆளுமை
ஆகியவற்றைத்
தன்னிடம் கொண்டவர்

கழற்குடம்
மடல்பனை
பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு
ஆகியவற்றுக்கு
ஒப்பென்று சொல்லும்படி
மாறுபாடு கொண்ட
சிந்தனை உடையவர்

ஆசிரியர் ஆகும்
தகுதி இல்லாதவர்


இங்கு
ஆசிரியர் ஆகாதவர்
இயல்புகளில்
ஒன்றான


கழற்குடம்
மடல்பனை
பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு
ஆகியவற்றுக்கு
ஒப்பென்று சொல்லும்படி
மாறுபாடு கொண்ட
சிந்தனை உடையவர்

என்பது
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


போடப்பட்ட
வரிசைப்படி இல்லாமல்
பிறழும்படியாக
விரைந்து கொடுக்கும்
செய்கை கொண்டது

கழற்காய் நிரம்பிய
குடத்தின் குணம்


தானே தந்தால்தான்
பெறமுடியுமே அன்றி
தன்னிடத்தில்
விரும்பிவந்து
பறித்துக்கொள்ள
இடன்கொடாதது

மடல்கள் பெற்ற
பனையின் குணம்


வலிதின் அடைக்கத்
தன்னுள்ளே கொண்டு
அப்பஞ்சைத்
தான் பிறர்க்கு
எளிதில் கொடாதது

பஞ்சு அடைத்த
குடுக்கையின் குணம்


பல்வகையில்
உதவி செய்து
ஆதரித்து
வளர்க்கின்ற தன்மையும்
இல்லாத பிறர்க்கு
தன்னுடைய
பலன்களை அளிப்பது

(வேலிக்கு வெளிப்புறம்)
வளைந்த தென்னை
மரத்தின் குணம்


இவற்றிற்கு
(கழற்குடம் -
மடல்பனை -
பருத்திக் குண்டிகை -
முடத்தெங்கு)
ஒப்பாக


கற்பிக்க வேண்டிய
முறைப்படி இல்லாமல்
பிறழும்படியாக
விரைந்து கற்பிப்பது

தான் சொன்னால்
மட்டுமே
அறியமுடியுமே அன்றி
தன்னை நெருங்கிவந்து
வினவி
அறிந்துக்கொள்ள
இடங்கொடாதது

மாணவர் உணர்வு
பெரியதாயினும்
சிறிதுசிறிதாய்
பாடங்களைக்
கற்றுக்கொடுப்பது

பல்வகையில்
உதவிசெய்து
வணங்கும் தன்மையும்
இல்லாதவர்க்குக்
கல்விப்
பயன்களைத் தருவது


ஆசிரியர் ஆகும்
தகுதி இல்லாதவர் குணம்


நன்னூல்
சூத்திரம்-32


பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே

பெய்தமுறை அன்றிப் பிறழ உடன்தரும்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே

போடப்பட்ட வரிசைப்படி இல்லாமல்
பிறழும்படியாக விரைந்து கொடுக்கும்
செய்கை கொண்டது கழற்காய்
நிரம்பிய குடத்தின் குணம்


நன்னூல்
சூத்திரம்-33


தானே தரக்கொளி னன்றித் தன்பான்
மேவிக் கொளப்படா விடத்தது மடற்பனை

தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக் கொளப்படா இடத்தது மடல்பனை

தானே தந்தால்தான் பெறமுடியுமே
அன்றி தன்னிடத்தில் விரும்பிவந்து
பறித்துக்கொள்ள இடன்கொடாதது 
மடல்கள் பெற்ற பனையின் குணம்


நன்னூல்
சூத்திரம்-34


அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க்
கொளிதீ வில்லது பருத்திக் குண்டிகை

அரிதின் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு
எளிது ஈவுஇல்லது பருத்திக் குண்டிகை

வலிதின் அடைக்கத் தன்னுள்ளே 
கொண்டு அப்பஞ்சைத் தான் பிறர்க்கு
எளிதில் கொடாதது பஞ்சு அடைத்த
குடுக்கையின் குணம்


நன்னூல்
சூத்திரம்-35


பல்வகை யுதவி வழிபடு பண்பின்
அல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே

பல்வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடம் தெங்கே

பல்வகையில் உதவிசெய்து ஆதரித்து
வளர்க்கின்ற தன்மையும் இல்லாத
பிறர்க்கு தன்னுடைய பலன்களை
அளிப்பது (வேலிக்கு வெளிப்புறம்)
வளைந்த தென்னை மரத்தின் குணம்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




32) ஆசிரியர் ஆகாதவர் இயல்பு-1


ஆசிரியர் ஆகாதவர் இயல்பு

The Bad Qualities Of The Teacher

குடிப்பிறப்பு
அருளுடைமை
கடவுள் பக்தி
ஆகியவற்றில்
உயர் சிறப்பும்

பல
கலைகளையும்
கற்று
தேர்ந்த அறிவும்

தாம்
கற்றவற்றைப்
பிறருக்கு
எடுத்துரைக்கும்
சொல் வன்மையும்

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமையும்

உலகியல் அறிவும்

உயர்ந்த குணமும்

தன்னுடைய
இயல்புகளாகப்
பெற்றவரே

நல்ல

நூல் ஆசிரியர்
(நூலாசிரியர்)

உரை ஆசிரியர்
(உரையாசிரியர்)


இதற்கு
மாறாக


போதிக்கும்
குணமில்லாதவர்

இழிந்த குணத்தை
இயல்பாகக் கொண்டவர்

பொறாமை
ஆசை
வஞ்சம்
அச்சம்
ஆளுமை
ஆகியவற்றைத்
தன்னிடம் கொண்டவர்

கழற்குடம்
மடல்பனை
பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு
ஆகியவற்றுக்கு
ஒப்பென்று சொல்லும்படி
மாறுபாடு கொண்ட
சிந்தனை உடையவர்

ஆசிரியர் ஆகும்
தகுதி இல்லாதவர்


நன்னூல்
சூத்திரம்-31


மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும்
அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும்
கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோ ரிலரா சிரியரா குதலே

மொழிகுணம் இன்மையும் இழிகுணம் இயல்பும்
அழுக்காறு அவாவஞ்சம் அச்சம் ஆடலும்
கழல்குடம் மடல்பனை பருத்திக் குண்டிகை
முடம் தெங்கு ஒப்புஎன முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே

போதிக்கும் குணமில்லாமை இழிந்த 
குணத்தை இயல்பாகக் கொண்டமை
பொறாமை, ஆசை, வஞ்சம், அச்சம்,
ஆளுமை, ஆகியவற்றைத் கொண்டமை
கழல்குடம், மடல்பனை, பருத்திக் குண்டிகை,
முடம் தெங்கு ஆகியவற்றுக்கு ஒப்பென்று 
சொல்லும்படி மாறுபாடு கொண்ட
சிந்தனை உடையோர் ஆசிரியர்
ஆகும் தகுதியற்றவர்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




31) ஆசிரியர் இயல்பு-2


ஆசிரியர் இயல்பு 
(நிலம்  மலை  நிறைகோல் - மலர்)

The Qualities Of The Teacher 
(Earth  Mountain  Balance - Flower)

குடிப்பிறப்பு
அருளுடைமை
கடவுள் பக்தி
ஆகியவற்றில்
உயர் சிறப்பும்

பல
கலைகளையும்
கற்று
தேர்ந்த அறிவும்

தாம்
கற்றவற்றைப்
பிறருக்கு
எடுத்துரைக்கும்
சொல் வன்மையும்

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமையும்

உலகியல் அறிவும்

உயர்ந்த குணமும்

தன்னுடைய
இயல்புகளாகப்
பெற்றவரே

நல்ல

நூல் ஆசிரியர்
(நூலாசிரியர்)

உரை ஆசிரியர்
(உரையாசிரியர்)


இங்கு
ஆசிரியரின்
இயல்புகளில்
ஒன்றான

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமை

என்பது
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


காணுதற்கு அரிய
பெருமையும்

எதனையும் தாங்கும்
வலிமையும்

குற்றங்களைப் பொறுக்கும்
பொறுமையும்

பருவமுயற்சிக்குத் தக்க
பலனும்

நிலத்தின் / ஆசிரியரின்
மாண்பு


அளப்பதற்கு முடியாத
அளவும் பொருளும்

அசைக்க முடியாத
தன்மையும் உருவமும்

வறட்சியிலும்
வளம்தரும் வள்ளன்மையும்

மலையின் / ஆசிரியரின்
மாண்பு


சந்தேகம் நீங்கும்படி
பொருளை உணர்த்தலும்

உண்மைக்காக
நடுநிலை நிற்றலும்

தராசின் / ஆசிரியரின்
மாண்பு


நற்செய்கைக்கு
மிகவும் அவசியமும்

யாவரும் மகிழ்ந்து
ஏற்கும் மென்மையும்

குறித்த பொழுதில்
முகம் மலர்ச்சியும்

மலரின் / ஆசிரியரின்
மாண்பு


  
நன்னூல்
சூத்திரம்-27


தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே

தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி அளவின் பயத்தலும்
மருவிய நல்நிலம் மாண்பு ஆகும்மே

காணுதற்கு அரிய பெருமையும் வலிமையும்
பொறுமையும் பருவ முயற்சிக்கு ஏற்ற
அளவில் பயனும் நல்ல நிலத்தின் மாண்பு
ஆகுமே.



நன்னூல்
சூத்திரம்-28


அளக்க லாகா வளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே

அளக்கல் ஆகா அளவும் பொருளும்
துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே

அளப்பதற்கு முடியாத அளவும் பொருளும்
அசைக்க முடியாத தன்மையும் உருவமும்
வறட்சியிலும் வளம் தரும் வள்ளன்மையும்
மலைக்கான மாண்பே.


நன்னூல்
சூத்திரம்-29


ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே

ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே

சந்தேகம் நீங்கும்படி பொருளை
உணர்த்துதலும் உண்மைக்காக நடுநிலை
நிற்றலும் தராசிற்கான மாண்பே


நன்னூல்
சூத்திரம்-30


மங்கல மாகி யின்றி யமையா
தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் 
பொழுதின் முகமலர் வுடையது பூவே

மங்கலம் ஆகியின்றி யமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் 
பொழுதின் முகமலர் உடையது பூவே

நற்செய்கைக்கு மிகவும் அவசியமும்
யாவரும் மகிழ்ந்து ஏற்கும் மென்மையும்
குறித்த பொழுதில் முகம் மலர்ச்சியும்
உடையது பூவின் மாண்பே.




🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




30) ஆசிரியர் இயல்பு-1


நல்லாசிரியர்  ஆசிரியர் இயல்பு

The Qualities Of The Teacher

ஆண்டவன்
படைப்பில்
ஆறறிவு
அதிசயம்

மனிதன்


அம்மனித
வாழ்க்கையின்

சிறந்த
வாழ்வியல்
முறை

அற வழியில்
பொருள் ஈட்டி
இன்பம் துய்த்து
வீடு அடைதல்


அச்சிறந்த
வாழ்வியல்
முறையில்
குறிப்பிடப்படும்

அறம்
பொருள்
இன்பம்
வீடு

ஆகிய
நாற்பொருட்களை
அடைவதே

ஒவ்வொரு
மனிதனின்

இன்றியமையாத
இலட்சியம்


அதனை
(இலட்சியத்தை)
அடைந்திட

தக்கதொரு
துணை


ஆசிரியர்
(குரு ஆசான்
உபாத்தியாயர்)


ஏனெனில்


அவர்
(ஆசிரியர்)


இருளில்
ஒளி காட்டிடும்
சுடர் விளக்கு

கல்லைச்
சிலை ஆக்கிடும்
சிற்பி

பேதையை
மேதை ஆக்கிடும்
அறிவாளி

பகுத்தறிவுக்குப்
பாதை வகுத்திடும்
பகலவன்

அஞ்ஞானத்தை
அறவே ஒழித்திடும்
மெய்ஞானி

பணியைத்
தொண்டாக ஆற்றிடும்
பண்பாளன்

உயர்நிலைக்கு
நம்மை ஏற்றிவிடும்
ஏணிப்படி

தினந்தோறும்
கல்வி கற்றிடும்
மாணவன்


இதுமட்டுமல்ல


அன்பினை
ஊட்டிடும்
அன்னை

வாழ்வைத்
தந்திடும்
தந்தை

அறிவை
அளித்திடும்
அறிஞன்

கலையினைப்
படைத்திடும்
கலைஞன்

கவிதையைக்
கற்பித்திடும்
கவிஞன்

புலமையைப்
வளர்த்திடும்
புலவன்

உலகை
உணர்த்திடும்
சித்தன்

ஞானத்தைப்
போதித்திடும்
ஞானி

எழுத்தினை
அறிவித்திடும்
இறைவன்


இங்கு

இத்தனை
சிறப்புகளுக்கும்
உரிய
ஆசிரியர்

அவசியம்
பெற்றிருக்க
வேண்டிய

இயல்புகள்
எவையென
அறிந்துக்கொள்வோம்


ஆசிரியர்
இயல்புகள்


குடிப்பிறப்பு
அருளுடைமை
கடவுள் பக்தி
ஆகியவற்றில்
உயர் சிறப்பும்

பல
கலைகளையும்
கற்றுத்
தேர்ந்த அறிவும்

தாம்
கற்றவற்றைப்
பிறருக்கு
எடுத்துரைக்கும்
சொல் வன்மையும்

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமையும்

உலகியல் அறிவும்

உயர்ந்த குணமும்

பெற்றவரே

நூல் ஆசிரியர்
(நூலாசிரியர்)

உரை ஆசிரியர்
(உரையாசிரியர்)


அந்த
உயர்ந்த
உள்ளத்திற்கு

இந்த

காணொளியைக்
காணிக்கையாக்கி

அகமகிழ்கின்றேன்



நன்னூல்
சூத்திரம்-26


குலனரு டெய்வங் கொள்கை மேன்மை
கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
அமைபவ நூலுரை யாசிரி யன்னே.

குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகுஇயல் அறிவுஓடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூல்உரை ஆசிரியன் அன்னே.

குடிப்பிறப்பு, அருளுடைமை, கடவுள் பக்தி
ஆகியவற்றில் உயர் சிறப்பும்; பல
கலைகளையும் கற்று தேர்ந்த அறிவும்;
தாம் கற்றவற்றைப் பிறருக்கு 
எடுத்துரைக்கும் சொல் வன்மையும்;
நிலம், மலை, தராசு, மலர்
ஆகியவற்றிற்கு நிகரான பெருமையும்;
உலகியல் அறிவும்; உயர்ந்த குணமும்
பெற்றவரே நூலாசிரியர் உரையாசிரியர்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar