வலைப்பதிவு அறிமுகம்
கற்க கசடற
இலக்கணமும் இலக்கியமும்
தெரியாதவன்
ஏடு எழுதுதல் கேடு நல்கும்
-
பாரதிதாசன்
மனிதன்
தனது கருத்துகளை
அடுத்தவர்க்கும்
அடுத்த தலைமுறைக்கும்
பகிர்ந்திடவும்
பதிவு செய்திடவும்
ஒலி வடிவிலும்
வரி வடிவிலும்
ஊடகமாய்
உருவாக்கிக் கொண்டது
மொழி.
அம்மொழிக்கு
இலக்கணமும் இலக்கியமும்
இரு கண்கள்.
இலக்கணம்
மொழியின்
அமைப்பையும் அழகையும்
ஐந்து வகைகளாய்
காட்டிடும்.
இலக்கியம்
மனிதனின்
அறிவையும் ஆற்றலையும்
அரிய படைப்புகளாய்
காட்டிடும்.
இங்கு
உயர்தனிச் செம்மொழி
என்ற
சிறப்பினைப் பெற்ற
தன்னிகரில்லாத்
தமிழ் மொழியின்
எழுத்து சொல்
பொருள் யாப்பு அணி
எனும் ஐவகை
இலக்கணம்குறித்து
தொல்காப்பியம்
நன்னூல்
நம்பி அகப்பொருள்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பருங்கலக் காரிகை
தண்டியலங்காரம்
நூல்கள்மூலம்
அடியேன்
அறிந்தவற்றை
அனைவருக்கும்
எடுத்துரைக்கும் முயற்சி.
இது ஒரு
இலக்கணச் சுருக்கம்
இலக்கணச் சூத்திரம்
இலக்கணத் தெளிவு
இலக்கண வரையறை
இலக்கண விளக்கம்
🙏🙏🙏
வேலூர்
- கவிஞர் பொன். இராஜன் பாபு
(தமிழ் விடுகதை படைப்பாளி)
குரு விஷ்ணு
– தமிழ் இலக்கணம்
Vellore
- Kavignar P. Rajan Babu
(Tamil Riddle Creator)
Guru Vishnu - Tamil
Grammar / Ilakkanam
No comments:
Post a Comment