Friday, December 27, 2019

9) மொழியின் இரு விழிகள்

மொழியின் இரு விழிகள்

Two Eyes of Language

மனிதன்

ஆரம்பத்தில்

தனது
கருத்துக்களைப்
பிறரும்

பிறர்
கருத்துக்களைத்
தானும்

அறிந்துக் கொள்ள
புரிந்துக் கொள்ள

ஒலி வடிவிலும்
வரி வடிவிலும்

உருவாக்கிக் கொண்ட
ஊடகம்

மொழி
Language


அது (மொழி)


ஒலி வடிவில்
பேசப்படும்
பொழுது

பேச்சு மொழி
Spoken Language


வரி வடிவில்
எழுதப்படும்
பொழுது

எழுத்து மொழி
Written Language

என
இரு வடிவங்களை
ஏற்கின்றது


கருத்து
பரிமாற்றத்திற்கு
மட்டுமே

பயன்படுத்தப்பட்டு
வந்த மொழி

நாளடைவில்

கேள்வி
கல்வி என

அவனது
ஆறாம் அறிவுக்கு

அடித்தளமாய்
அமைந்தது


ஒரு
மொழிக்கு

அமைப்பையும்
அழகையும்
அளித்திடவும்

இலக்கியம்
இப்படித்தான்
இருக்க
வேண்டுமென்றும்

மனிதனால்
வகுக்கப்பட்ட

வழக்குகள்
வரையறைகள்
விதிமுறைகள்

இலக்கணம்
Grammar

என்றும்

ஒரு
மொழியில்

இலக்கணத்தைத்
துணையாகக்
கொண்டு

எண்ணங்களைச்
சொற்கள்மூலம்
வெளிப்படுத்தி

மனிதனால்

படைக்கப்பட்ட
பல்வகை
படைப்புகள்

இலக்கியம்
Literature

என்றும்
அழைக்கப்படுகின்றன


இவை
இரண்டுந்தான்

ஒரு
மொழியின்

இரு
விழிகளாகக்
கருதப்படுகின்றன


இந்த
இரு விழிகள்
கொண்டே

ஒரு
மொழியைத்

தெளிவாகவும்
திருத்தமாகவும்

காண முடியும்
அறிய முடியும்
என்பது

யாராலும்
மறுக்கமுடியாத
உண்மை


இலக்கணமும்
இலக்கியமும்
தெரியாதான்
ஏடெழுதுதல்
கேடு நல்கும்

என்ற

பாவேந்தர்
பாரதிதாசன்
கூற்று

இத்தருணத்தில்
ஒவ்வொருவரும்

அவசியம்
அறியவேண்டிய
பேருண்மை



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment