நாற்பொருட் பயன்
The Four Cardinal Blessings
ஓர்இரு
பாயிரம் அமைந்து
மூவகை
நூல்களில் ஒன்றாக
நான்கு
பொருள் பயனோடு
ஏழு
வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக்
குற்றங்கள் இல்லாமல்
பத்து
அழகோடு
முப்பத்திரண்டு
உத்தியைக் கொண்டு
இயல்
அதிகாரம் என்னும் உறுப்புகளில்
சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகிய
வேறுபட்ட
நடைகளைப் பெறும்
என்பது
நூலின் இயல்புகள்
இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான
நாற்பொருள்
பயன்
நல்குவது
என்பது
குறித்து
நாற்பொருட் பயன்
என்ற
தலைப்பின் கீழ்
சற்று
விளக்கமாக
அறிவோம்
மனித
வாழ்க்கையின்
சிறந்த
வாழ்வியல்
முறை
அற வழியில்
பொருள் ஈட்டி
இன்பம் துய்த்து
வீடு அடைதல்
அச்சிறந்த
வாழ்வியல்
முறையில்
குறிப்பிடப்படும்
அறம்
பொருள்
இன்பம்
வீடு
ஆகிய
நாற்பொருட்களை
அடைவதே
நூலினால்
பெறப்படும்
பயனாகும்
நன்னூல்
சூத்திரம்-10
அறம்பொரு
ளின்பம்வீ டடைதனூற் பயனே
அறம்பொருள் இன்பம்வீடு அடைதல்நூல்
பயனே
அறம் பொருள் இன்பம் வீடு என்னும்
நான்கு
பொருளையும் அடைவதே
நூலினால்
பெறப்படும் பயனாகும்.
No comments:
Post a Comment