Friday, December 27, 2019

21) நாற்பொருட் பயன்


நாற்பொருட் பயன்

The Four Cardinal Blessings

ஓர்இரு பாயிரம் அமைந்து
மூவகை நூல்களில் ஒன்றாக
நான்கு பொருள் பயனோடு
ஏழு வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக் குற்றங்கள் இல்லாமல்
பத்து அழகோடு
முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு
இயல் அதிகாரம் என்னும் உறுப்புகளில் 
சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகிய 
வேறுபட்ட நடைகளைப் பெறும்

என்பது
நூலின் இயல்புகள்


இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான

நாற்பொருள்
பயன்
நல்குவது

என்பது
குறித்து

நாற்பொருட் பயன்
என்ற
தலைப்பின் கீழ்

சற்று
விளக்கமாக
அறிவோம்


மனித
வாழ்க்கையின்

சிறந்த
வாழ்வியல்
முறை

அற வழியில்
பொருள் ஈட்டி
இன்பம் துய்த்து
வீடு அடைதல்

அச்சிறந்த
வாழ்வியல்
முறையில்
குறிப்பிடப்படும்

அறம்
பொருள்
இன்பம்
வீடு

ஆகிய
நாற்பொருட்களை
அடைவதே

நூலினால்
பெறப்படும்
பயனாகும்



நன்னூல்
சூத்திரம்-10


அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே

அறம்பொருள் இன்பம்வீடு அடைதல்நூல் பயனே

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் 
நான்கு பொருளையும் அடைவதே
நூலினால் பெறப்படும் பயனாகும்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment