நன்னூல் - நூல் அறிமுகம்
Nannuul – An Introduction
இயல் இசை
நாடகம் என
முத்தமிழ்
பிரிவுகளைக்
கொண்டு
நாவுக்கும்
செவிக்கும்
சிந்தைக்கும்
இனிமை
பயப்பதால்
தேன்தமிழ்
என்று
சிறப்பிக்கப்படுவது
தமிழ் மொழி
அதில்
(தமிழ் மொழியில்)
இயற்றமிழுக்கான
இலக்கண
வகைகள் ஐந்து
அவைகள்
முறையே
எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்
இங்கு
எழுத்து – சொல் – தொடர்
குறித்த
தெளிவினைக்
கொடுத்திடும்
எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
கற்றிட
சிறந்த
இலக்கண நூலாகக்
கருதப்பட்டு
பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும்
பாட நூலாய்க்
கற்கப்படுகின்ற
பவணந்தி முனிவர்
இயற்றிய
நன்னூல் குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
இது
(நன்னூல்)
சீயகங்கன் என்ற
சிற்றரசனின்
வேண்டுகோளின்படி
பவணந்தி முனிவர்
என்ற
சமண முனிவரால்
தொல்காப்பியத்தை
முதல் நூலாகக்
கொண்டு
எழுதப்பட்ட
ஒரு வழி நூல்
இதன்
(நன்னூலின்)
வேறு பெயர்கள்
சிற்றதிகாரம்
(இரண்டு
அதிகாரங்களைக்
கொண்டது)
பின்னூல்
(தொன்னூல் என்பது
தொல்காப்பியம்
பின்னூல் என்பது
நன்னூல்)
இதற்கு
(நன்னூலுக்கு)
உரை எழுதிய
உரையாசிரியர்கள்
மயிலைநாதர்
சங்கர நமச்சிவாயர்
சிவஞான முனிவர்
ஆண்டிப்புலவர்
கூழங்கைத் தம்பிரான்
இராமானுச கவிராயர்
விசாகப்பெருமாள் ஐயர்
ஆறுமுக நாவலர்
மற்றும் பலர்
இதன் பகுப்பு
(நன்னூல் பகுப்பு)
அதிகாரம் என்ற
பெரும் பிரிவும்
இயல் என்ற
சிறு பிரிவும்
கொண்ட பகுப்பு
நன்னூலில்
எழுத்து இலக்கணம்
எழுத்ததிகாரம்
என்ற
பெரும் பிரிவின் கீழ்
எழுத்தியல்
பதவியல்
உயிரீற்றுப் புணரியல்
மெய்யீற்றுப்
புணரியல்
உருபு புணரியல்
என்ற
ஐந்து சிறு பிரிவுகள்
கொண்டு
202
சூத்திரங்கள்
மூலமும்
சொல் இலக்கணம்
சொல்லதிகாரம்
என்ற
பெரும் பிரிவின் கீழ்
பெயரியல்
வினையியல்
பொதுவியல்
இடையியல்
உரியியல்
என்ற
ஐந்து சிறு பிரிவுகள்
கொண்டு
205
சூத்திரங்கள்
மூலமும்
விளக்கப்படுகின்றன
இதுமட்டுமன்றி
ஒரு நூலுக்கு
இன்றியமையாதது
எனக்
கருதப்படுவது
பாயிரம்
அது
ஒரு நூலில்
சிறப்புப்பாயிரம்
பொதுப்பாயிரம்
என
இருவகைகளில்
அமையும்
சிறப்புப்பாயிரம்
என்பது
அது
இடம்பெறும்
நூலுக்குரிய
முக்கியமான
விவரங்கள் கொண்டு
அமைவது
பொதுப்பாயிரம்
என்பது
பொதுவாக
எல்லா
நூல்களுக்கும்
உரிய
பொதுவான
விவரங்கள் கூறி
அமைவது
அவ்வகையில்
இதில்
(நன்னூலில்)
பொதுப்பாயிரம்
என்ற
தலைப்பின் கீழ்
நூலின் வரலாறு
ஆசிரியனது வரலாறு
பாடஞ்சொல்லலின் வரலாறு
மாணாக்கனது வரலாறு
பாடம் கேட்டலின் வரலாறு
முதலியனவும்
அதனைத்
தொடர்ந்து
சிறப்புப்பாயிரத்தின்
இலக்கணம்
என்ற
தலைப்பின் கீழ்
ஒரு குறிப்பிட்ட
நூலுக்கு மட்டும்
சிறப்பாகப்
பொருந்தும்
விவரங்களை
உள்ளடக்கிய
சிறப்புப்பாயிரத்தின்
இலக்கணமும்
55
சூத்திரங்கள்
மூலம்
விளக்கப்படுகின்றன
இங்கு
சூத்திரம்
(நூற்பா – செய்யுள் – பாடல்)
என்பது
மிகப்பெரிய
கருத்தையும்
சில சொற்களில்
சுருக்கமாக
விளக்குவது
நன்னூல்
462
சூத்திரங்கள்
கொண்டு
எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
ஆகியவற்றோடு
பாயிரம் குறித்தும்
தெள்ளத்தெளிவாய்
விளக்கிடும்
ஓர்
அற்புதமான நூல்
No comments:
Post a Comment