Friday, December 27, 2019

34) கற்பிக்கும் இயல்பு


கற்பிக்கும் இயல்பு

The Method of Teaching 

குடிப்பிறப்பு
அருளுடைமை
கடவுள் பக்தி
ஆகியவற்றில்
உயர் சிறப்பும்

பல
கலைகளையும்
கற்றுத்
தேர்ந்த அறிவும்

தாம்
கற்றவற்றைப்
பிறருக்கு
எடுத்துரைக்கும்
சொல் வன்மையும்

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமையும்

உலகியல் அறிவும்

உயர்ந்த குணமும்


ஆசிரியரின்
இயல்புகள்


மேலும்


காலத்தையும்
இடத்தையும்
தூயதாகத்
தேர்ந்தெடுத்தும்

மேன்மையான
இடத்திலிருந்தும்

தான் வழிபடும்
கடவுளைத்
துதித்து வணங்கியும்

தன்னால்
சொல்லப்படுவதாகிய
நூற்பொருளைத்
தனது மனத்துள்ளே
நிறைத்தும்

துரிதப்
படாதவனாகவும்

கோபப்
படாதவனாகவும்

கற்பிப்பதில்
விருப்பம் கொண்டும்

இன்முகத்துடனும்

மாணவன்
கொளத்தகும் அறிவு
இவ்வளவு
என அறிந்து
அவன் அறிவு
ஏற்கும்படியாகவும்

மாறுபாடு இல்லாத
மனத்துடனும்

நூல் பொருளைக்
கற்பித்தல்

என்பது

அவரின்
(ஆசிரியரின்)

கற்பிக்கும்
இயல்புகள்

என

அறிவுடையோர்
குறிப்பிடுவன


நன்னூல்
சூத்திரம்-36


ஈத லியல்பே யியம்புங் காலைக்
காலமு மிடனும் வாலிதி னோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப.

ஈதல் இயல்பே இயம்பும் காலைக்
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகம்மலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளம்கொளக்
கோட்டம்இல் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப.

கற்பித்தல் இயல்பினை சொல்வதென்றால்
(அது) காலத்தையும் இடத்தையும் தூயதாய்
தேர்ந்தெடுத்து மேன்மையான
இடத்திலிருந்து தான் வழிபடும் கடவுளைத்
துதித்து (தன்னால்) சொல்லப்படுவதாகிய
(நூற்)பொருளை (தனது) மனத்துள்ளே
நிறைத்தும் துரிதப்படாதவனாகவும் கோபப்
படாதவனாகவும் (கற்பிப்பதில்) விருப்பம்
கொண்டும் இன்முகத்துடனும் மாணவன்
கொளத்தகும் அறிவு இவ்வளவு என
அறிந்து அவன் அறிவு ஏற்கும்படியாகவும்
மாறுபாடில்லாத மனத்துடனும்
நூல் பொருளைக் கற்பித்தல் என்று
கூறுவர் (அறிவுடையோர்).



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment