Friday, December 27, 2019

1) மொழி – ஓர் அறிமுகம்


மொழி – ஓர் அறிமுகம்

Language - An Introduction

இறைவனால்

இம்மண்ணுலகில்
படைக்கப்பட்ட

எண்ணற்ற
உயிரினங்களில்

மகத்தானதாய்
மதிக்கப்படும்

மனிதன்

ஆறாம் அறிவான
பகுத்தறிவை
பெற்றிருந்தும்

கற்காலத்திற்கும்
முந்தைய
பழங்காலத்தில்

தனது

கண்ணால் கண்டதை
காதால் கேட்டதை
வாயால் உண்டதை
மூக்கால் முகர்ந்ததை
மெய்யால் உணர்ந்த்தை
அறிவால் அறிந்ததை

மற்றவர்களுடன்
பரிமாறிக்கொள்ள

சத்தங்களையும்
சைகைகளையும்
மட்டுமே
பயன்படுத்தி
வந்தான்


காடுகளிலும்
மலைக்
குகைகளைலும்

தனது
வாழ்க்கையை
வாழ்ந்துவந்த
அவன்

காலப்போக்கில்

கால்போன
போக்கிலும்
மனம்போன
போக்கிலும்

நாடோடிகளாய்
இடம்பெயர்ந்து
சென்று

ஓர்
இருப்பிடத்தையும்
இனத்தையும்
உருவாக்கிக்
கொண்டான்

முதலில்

உணவு
உடை
உறையுள்

ஆகியவற்றில்
மாற்றங்கள் பல
கண்டான்


நாளடைவில்

நாகரிக
வளர்ச்சி பெற்ற
அவன்

தன்னுடைய

எண்ணம்
கருத்து
சிந்தனை

ஆகியவற்றை
அடுத்தவருடன்
பகிர்ந்திடவும்

அடுத்த
தலைமுறைக்கு
அதனைப்
பதிவுசெய்து
வைத்திடவும்

ஓர்
ஊடகமாய்
உருவாக்கிக் கொண்டதே
மொழி

அது
(மொழி)

மனிதனின் அறிவு
நிலைப்பட்டுள்ளது
என்பதற்கான
ஓர் அடையாளம்


மக்களின் வாழ்வை
உள்ளதை உள்ளபடி
அப்படியே
பிரதிபலிக்கின்ற
ஒரு கண்ணாடி


மக்கள்
தங்கள் கருத்துக்களை
பரிமாறிக்கொள்ளும்
ஒரு கருவி

ஒலி வடிவிலும்
எழுத்து வடிவிலும்

மனித
உணர்வுகளை
உணர்ச்சிகளை
சிந்தனைகளை
செயல்களை
வெளிபடுத்தும்
ஒரு சாதனம்


மொழி அறியப்பட்ட
பின்னரே
மனித வாழ்க்கையில்

பல்வேறு
வளர்ச்சிகளும்
கிளர்ச்சிகளும்
உருவானது

என்பது
தெள்ளத்தெளிவான
உண்மை


காலப்போக்கில்

மொழியானது
தொடர்பு கருவியாக
மட்டுமல்லாது

அவனது
ஊனிலும்
உயிரிலும் கலந்து

வாழ்வியல்
கூறாகவும்
தொப்புள்கொடி
உறவாகவும்
மாறிப்போனது


ஆம்...


உலகில் இன்று
ஏறக்குறைய
ஆறாயிரம் முதல்
ஏழாயிரம் வரையிலான
எண்ணிக்கை கொண்ட


மனித
கண்டுபிடிப்புகளில்
முதலிடன் பிடிக்கும்

மொழி


ஒவ்வொரு
மனிதனுக்கும்
அவனுடைய
வாழ்வில்
இன்றியமையாத
தேவை என்பது

அனைவரும்
அவசியம்
அறிய வேண்டிய
ஓர் உண்மை.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment